Friday, December 30, 2016
வேள்வியின் கேள்வி நீ!
பூங்கோதையை என் செய்வேன்?
விடை தெரிந்தும் ஏனோ
வினாவிலே விளையாடுகிறாய்!
கயல்விழியாள் மொழி அறிவேன்
காலத்தின் நிலை புரியேன்
ஞாலத்தின் அகப்பொருளே
காலத்தை வெல்பவன் நீ
காலத்தை வென்றாலும்
புரியா கவிதையாய் நின்றாய் நீ
காதலை புரிய வைத்தாய்
என்கவிதைக்கு கருத்தானாய்
காதல் என்பது வேள்வியடி
அவ் வேள்வியின் வடிவமே நீயடி
மோகப் பிரியோனே
யாகத்துக்கு உரியவனே
மாயத்திலும் மெய்யாகி
நேயத்தின் உருவானாய்
வாழ்வுக்கு நிலை ஏது
உன் வடிவிற்கு நிகரேது?
ஊழிக்காலம் பல முடிந்தாலும்
எவ்வேள்வியின் வடிவமும் நாமே!
KRSHI!
Thursday, December 15, 2016
Subscribe to:
Posts (Atom)