Thursday, November 7, 2013

எட்டு வண்ண கோபியரும்! எட்டா வண்ணம் என்னவளும்!


மது கொடுத்து மதி மயக்கி
மதுசூதனன் மனம் கவர

செவி சிவக்க கவி பாடி
கேசவனின் குழல் பறிக்க

மாலையிட்டு மணம் முடித்து
மாதவனின் மெய் கவர

நாதங்கள் பல இசைத்து
நந்த கோபனுடன் நர்த்தனம் ஆட


நறுஞ்சுவைகள் பரிசளித்து
நிரஞ்சனை வசமாக்க

செந்தூர அலங்காரம் சீரளித்து
ஸ்ரீநிவாசனை கமலக்கரம் பற்ற

வண்ண வண்ண எண்ணம்
கொண்டு வந்திருக்கும் கோபியரே

உங்கள் கண்ணசைவில்
கொள்ளை போக இவன்
மழலை கண்ணன் இல்லையடீ

எட்டு வண்ண கோபியரே
எட்ட நின்று பாருங்கடீ
என்னவனின் கண்ணசைவு
என்னில் மட்டும் நிற்குமடீ
KRSHI!

No comments:

Post a Comment