என் உயிரே! என் ராதே!
முரளியை அர்ப்பித்து
முரளியை அர்ப்பித்து
உயிர் பிரிந்த உடலாக
உனை பிரிகிறேன்!
பார்த்திபா! என் பரந்தாமா!
பயிர் விளையா நிலமாக
பற்றற்று போவேனே
பற்றற்று போவேனே
நம் பிரிவில்!
கனிமொழியே! என் காவியமே!
அறியாமை இளமை முடிந்தது
இயலாத நிலைமை புரிந்தது
கடமை என்ற கட்டுக்குள்
காலம் என்னை பிணைத்தது
கார்வண்ணனே!என் கண்ணனே!
நிர்பந்தம் அற்ற நேசமடா
நிலையான உடமை நீயடா
சொந்தம் என்ற பெட்டகத்தை
புதைத்து விட்டேன் பாரடா
காத்திருப்பேன் காலமாக
ஜனம்ஜனனமும் உனை பெற
வரம் தா என் பரமாத்மா
கணமேனும் பிரியாத!!
KRSHI!

No comments:
Post a Comment