Wednesday, January 6, 2016

என் நாதமே!


வான வண்ணனே;
மாயக்கண்ணனே
தங்கிய எண்ணங்களை
தாங்கியே நின்றேன்
முக்காலமும் உன்னை
மொழிந்தே மகிழ்ந்தேன்
என் வழி காணாமல்
ஏன் விழி மூடி நின்றாய்?! 

அல்லி விழியாளே;
சொல்லில் இனியாளே
என்னுள் பதிந்தவளே
எழும் என்குழலிசை
முழுவதும் நீயடி
கண்ணின் மணியே
கண்ணுள் காணும்
காட்சிகள் முழுவதும்
ராதே ராதே நீ தானே.....
KRSHI!

No comments:

Post a Comment