Monday, October 21, 2013

நின்று ரசித்தது போதுமடா! என்று அணிவிப்பாய் வரமாலை?



என் கண்ணான கண்ணனே!
ஏனடா! என் மன மன்னனே!
என் மாலையும் கொண்டாய்
என் மனதையும் வென்றாய்
என்று எனையும் கொள்வாய்??

என் கண்ணின் மணியே!
என் காதலின் உவமையே!
வரமாலை ஏனடி கொள்வாய்?
வரமாக நானே வந்தேன்
மாறாத என் மன மோகனமே!

கன்னியரின் கள்வனே!
என்னை வென்ற குறும்பனே!
கானம் பாடி கொள்கிறாய்
மாயம் செய்து வெல்கிறாய்
ஏனடா! நீல வண்ணனே!
மணமாலை மறுப்பதேன்?
மாலையாக மட்டும் துடிப்பதேன்?

எண்ணமே என் வண்ணமாக
ஏனடி! என் மன ஏக்கமே!
உன் செந்தூர நாணம் மேலும்
சிங்காரமாக சிரிக்க கண்டு
உன்னில் மாலையாக துடிக்கிறேன்
என் சோலையாக்கி ரசிக்கின்றேன்!
KRSHI!

No comments:

Post a Comment