Monday, October 21, 2013

எல்லாம் நீயே!


என் அழகிய ராதே!
கானம் படிக்கிறாயா?
கண்ணனை படிக்கிறாயா?
காதலை படைத்த
கார்மேக கண்ணா!
படைத்ததும் நீயே
எனை மனதில்
அடைத்ததும் நீயே
படிப்பதும் நீயே
எனை பாடாய்
படுத்துவதும் நீயே
பாடுவதும் நீயே
தேடி நாடுவதும் நீயே
உருகுவதும் நீயே
எனை மெழுகாய்
உறுக்கியதும் நீயே
மணந்ததும் நீயே
எனை தென்றலாய்
பரவியதும் நீயே

அடி கோதையே!
ஒரு வினாவிற்கு
இத்தனை விடைகளா?
கோகுல கிருஷ்ணா!
முடிந்துவிட்ட உன் கேள்விக்கு
நான் முடிவற்ற வேள்வியடா!!!!!
KRSHI!

No comments:

Post a Comment