Monday, October 21, 2013

"கார்மேக வண்ணன்!"




கண்ணனை பாட
கன்னியர் பலர் உண்டு!
மன்னனை பாட
மனம் ஒன்றுதானே உண்டு!
சூட்சுமங்கள் பல கொண்டான்
சுற்றும் பூமி என் வாயில் என்றான்!
வெண்ணை கள்ளன் என பெயரும் கொண்டான்!
வித விதமாக காரணங்கள் சொன்னான்! 
கோபியருடன் லீலை கொண்டான்!
திரு நாமங்களை பல பெற்று நின்றான்!
குழல் வித்தையில் பலரை வென்றான்!
குமரி ராதையையும் கொள்ளை கொண்டான் !
சொன்ன சொல்லில் மாயம் என்றான் ! 
வெள்ளை உள்ளம் காதல் என்றான்! 
கடமைதான் முதலில் என்றான்! 
ராதைக்கு பின்தான் கிருஷ்ணன் என்றான்! 
மாயங்களை விதைத்து சென்றான்! 
நேயங்களே இல்லை என்றான் ! 
சாயங்களே புவி மைந்தர்கள் என்றான்! 
காயங்கள் அதன் படிமம் என்றான்!
உருவம் அருவம் ஏதும் இல்லை!
எல்லாம் உன் பாவம் என்றான்! 
கண்ணனை பாட கன்னியர் பல உண்டு
மன்னனை பாட மனம் ஒன்றுதானே உண்டு!!!
 KRSHI!

No comments:

Post a Comment