Monday, October 21, 2013

எனை பாடு!!


முகுந்தா!!
முதலில் என்னை
முத்தமிழில் பாடு!
உன் முரளியை
தருகிறேன் பிற்பாடு!

அடியே ராதே!
வம்பனிடம் வம்பா?
மதுர கானம்
இல்லா என் மாது
சுவாசம் தான்
விடுவாளா என்னோடு???

மாயக்கண்ணனே!
தினம் தினம்
உன் மாயம்தான்
நான் மறைந்ததும்
நீ கோபியருடந்தான்!

என்னை முழுதும்
நிறைந்த முச்சுடரே!
கணம் கணம்
நான் படும் கானம்
உன் நினைவின்
கோணம் தானடீ!
KRSHI!

No comments:

Post a Comment