Monday, October 21, 2013

என்பேன் என்பான்!!!!!!.....

முழுமதியே  என்றான்
சுற்றுவதால்,
பூமியே என்றேன்!

உயிரே என்றான்
உள்ளத்தின்
கடவுளே என்றேன்!

வானவில் என்றான்
ஊடுருவும்
ஒளிக்கீற்றே என்றேன்!

வசந்தமே என்றான்
வீசும் இனிமை
தென்றலே என்றேன்!

பனிமலரே என்றான்
கமழும் சுகமான
நறுமணமே என்றேன்!


தேன் நீயே என்றான்
பருகத்துடிக்கும்
தேனீயே என்றேன்!

தளிர்கொடியே என்றான்!
தாங்கும்
கொழுக் கொம்பே என்றேன்!

கண்ணே என்றான்
காக்கும் கண்ணின்
இமையே என்றேன்!

உருவே என்றான்
எனை தொடரும்
அருவே என்றேன்!

நினைவே என்றான்
நீங்காதா நீல
வண்ணமே என்றேன்!

கவியே என்றான்
தமிழ் சொல்லின்
சுவையே என்றேன்!

நீரே என்றான்
நிலம் தொடும்
மழையே என்றேன்!

நிலமே என்றான்
விளைய உதவும்
உரமே என்றேன்!

உதயமே என்றான்
வாசலில் வரவேற்கும்
சுப்ரபாதமே என்றேன்!

உலகமே என்றான்
மாறாத மறையாத
இயற்கையே என்றேன்!

சந்தமே என்றான்
என் கவிதையின்
சங்கீதமே என்றேன்!

இன்னும் என்பேன் என்பான்...
KRSHI!

No comments:

Post a Comment