தங்க மலரை
தான் எடுத்தேன்
தாங்கும் மலரையும்
அதில் இணைத்தேன்
துணைக்கு நினைவு
பொங்கும் நீளமான
நீலம் எடுத்து
மாலை தொடுத்தேன்
என் மாயவனே!!
நீ எனை மறந்தால்
நான் என்றும் மறைந்தால்
உன் மார்பில் நான்
தொடுத்த என் மணமாலை
மட்டும் தொட்டு படர....
என்னை உன்னுள்
மறைத்த அழகிய மாதே!
அடி என் ராதே!
எனை மறந்தாலும்
நான் மறைந்தாலும்
உன்னையே மார்பில் ஏற்பேன்
மண மாலையாக!
என் மனதில் வளர்ப்பேன்
மணக்கும் பசுஞ்சோலையாக!
KRSHI!
No comments:
Post a Comment