Monday, October 21, 2013

மதி மறந்த முழுமதி!

தினம் அனுதினம்
சிந்தையில் நினைவுண்டு
வெண்ணெய் நிரப்பிய
பொன் குடம் ஏந்தி செல்ல
கண்ணனிடம்!
கணம் நொடிக்கணம்
மாயகண்ணன் கானத்தில்
மதி மறந்த முழுமதி
செவி சிவக்க சிலையாகி
புவி மறந்த புலனாகி
மாலையே மங்கினாலும்
மதி வந்து தங்கினாலும்
நீர் நிரப்ப நினைவிழந்து
காலிகுடம் கையில் ஏந்தி
நித்திரையில் நடைபயிலும்
சித்திரை மாத நிலவானாள்!!!!
KRSHI!

No comments:

Post a Comment