வானம் பாடியான என்னை
மௌனம் நாட விட்டாய்!
கானம் தேடி பாட வந்தேன்
ஞானம் நாடி நாளும் நின்றேன்!
ஊனமான கரங்களுடன்
கை கோர்க்க கனவு கண்டேன்
ஆழ்மனதில் ஓர் வலி,
ஆழ்மனதில் ஓர் வலி,
அடைத்து கொண்டு வருவதேன்?
நினைவுகள் நிற்கவில்லை
மறக்கவில்லை !
மரத்து போக அவை
மனித ஜென்முமில்லை!
புன்னகை சென்றது,
புதைகுழியில்!
காலங்கள் சொல்கிறது
சோகங்கள் சுமையென!
KRSHI!
No comments:
Post a Comment