Monday, October 21, 2013

”மான்கள்!”




ராதே!!!!
என்அருகில் வாடி என்றால்
ஏந்துகின்றாய் கைகளை எங்கோ? 

கண்ணா!!!!
தோள்களில் சாய்ந்து
நாணம் கொண்டேன்!
வந்த மான்களை கண்டு
மிரண்டு விட்டேன்!

அடி ராதே!!!!
மான்கள் ஓடி வந்ததே
மான் விழியாளை காணத்தான்!

கண்ணா!!!
உன் கான மழையில் நனையவே!
மான்கள் ஓடி வந்தது!

அடி ராதே!!!
என் மான் விழியாள் நீயடி!
என் நிலையையும் கொஞ்சம் பாரடி!

கண்ணா!!!
இளகி விடுடா கைகளை,
அதற்கு இலையை கொடுத்து விடுகிறேன்!
 KRSHI!

No comments:

Post a Comment