சிரிக்க வைத்தாய்
சிவக்க வைத்தாய்
புரிய வைத்தாய்
புதிர் உடைத்தாய்
ராதே!
நித்தம்,நித்தம்
நினைக்க வைத்தாய்
நின்று நிதானித்து
கொஞ்ச வைத்தாய்
கண்ணா!
சுமந்து வந்தாய்
நிமிர்ந்து நின்றாய்
மாலையாய் தோளிலும்
மணமாய் நெஞ்சிலும்,
என்னவனே!
நீர்குவளை மூழ்குதடா
நித்தம் தாமதமாகுதடா
வெண் மதியும் வந்ததடா
பிரியா விடை வேண்டுமடா!
ராதே!
நளினமாய் வந்தாய்
நாணி கோணி நின்றாய்
என்னவளே! பொன்மகளே!
பிரியாமல் வந்துவிடு
குறையாமல் தந்துவிடு
விட்டு விடு குவளையை
என் மதியும் மூழ்கியது
KRSHI!
No comments:
Post a Comment