Monday, October 21, 2013

முத்தமிட்டு முத்தாடும் என் பித்தே!

என் உதயத்தின்
முழு ஒளியே! வீழாமல்
உன் மடியில் தாங்கி
ஸ்வரம் தவறாமல்
எனை மீட்டு!

என்னவனே! என்னுள்
அடங்கியவனே!
உயிருடன் உடலாக
உனை தொடர்வேன்
கரங்களில் ஏந்தி 
ஆனந்த ராகம் நீ பாடு!

இதயத்தில் இதமாக
இணைந்தவனே!
துடிக்கும் நெஞ்சில்
முகம் பதித்து
தூங்கும் சேயாய் நீ மாறு!

இக்காலம் முக்காலமும்!
எத்திசையும் உன் நேசம்
அதனுள் ஏங்கி தவிக்கும்
நம் நினைவின் நாதம்!
KRSHI!

No comments:

Post a Comment